Saturday

பாரதியார்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

பாரதியார்

பெயர் : சுப்பிரமணிய பாரதியார்

இயற்பெயர் : சுப்பையா

பெற்றோர் : சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மையார்

துணைவியார் : செல்லம்மாள்

காலம் : 11/12/1882 – 11/9/1921

சிறப்புப்பெயர்கள் : புதுக்கவிதையின் தந்தை, விடுதலைக் கவி, பாட்டுக்கொரு புலவன், மகாகவி.

நூல்கள் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், சந்திரிகையின் கதை, தாரசு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி.

குறிப்பு :

F  இவர் தனது சிறுவயதிலேயே தந்தையுடன் சேர்ந்து தமிழ்,ஆங்கிலம், கணிதம் போன்றவற்றை கற்றார்.

F  இவர் வடமொழி, இந்தி, பிரெஞ்சு போன்ற பிற மொழிகளையும் கற்றார்.

F  சிறுவயதிலே கவிபாடும் திறமை பெற்றவர் இதனால் இவருக்கு பாரதி என்ற பட்டம் கிடைத்தது.

F  இவர் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

F  இவரது முதல் பாடலான தனிமை இரக்கம் மதுரையில் விவேக பானு என்னும் நாளேட்டில் வந்துள்ளது.

F  இவர் சென்னை சுதேசமித்திரன் நாளிதழில் துணை ஆசிரியாராக பணியாற்றினார்.

F  அதன்பிறகு சக்கரவர்த்தினி என்ற இதழைத் தொடங்கினார்.

F  சிறிது நாட்களுக்கு பிறகு இந்தியா என்ற நாளோட்டினைத் தொடங்கினார்.

F  விஜயா, கர்மயோகி, சூரியயோதயம் போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணிப்புரிந்தார்.

F  இவர் ஆங்கிலத்தில் பாலபாரதம் என்ற இதழைத் தொடங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதன் ஆசிரியராக பணிப்புரிந்தார்.

F  ஞானரதம் என்ற உரைநடையை எழுதினார். இதுவே தமிழில் தோன்றிய முதல் உரைநடை காவியம் ஆகும்.

மேற்கோள்

v  மாதர்தம்மை இழிவு செய்யும்.......

v  விடுதலை விடுதலை விடுதலை.......

v  பாருக்குள்ளே நல்ல நாடு........

v  செந்தமிழ் நாடெனும் போதினிலே........

v  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவஎங்கும் காணோம்......

v  ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே........

v  நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை........

v  எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்.......

v  சாதிகள் இல்லையடி பாப்பா.......

v  உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்.......

v  நமக்குத் தொழில் கவிதை இயற்றுதல், நாட்டிற்கு உழைத்தல்.........

சிறப்பு

è கவிமணி – பாட்டுக்கொரு புலவன் பராதி

è கல்கத்தா காங்கிரஸ் மாநாடு

è பாடல்கள் – ஸ்வதேச கீதங்கள்

è முப்பெருங்காப்பியங்கள் – கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்

è கலிவெண்பா – பாரதியின் குயில் பாட்டு

è பகவத்கீதை – தமிழில் மொழிப்பெயர்ந்தார்

è ஷெல்லி தாசன் – ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி மீது கொண்ட ஈடுபாடு

è பாரதிதாசன் – தமிழால் பராதி தகுதி பெற்றதும் தமிழ் பராதியால் தகுதி பெற்றதும் பற்றி என்னவென்று சொல்வது

è பாரதியார் – தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி.

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...