Tuesday

இரா.மீனாட்சி

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

இரா.மீனாட்சி

பெற்றோர் : இராமசந்திரன், மதுரம்    

பிறந்த ஊர் : திருவாரூர்        

படைப்புகள் : கொடிவிளக்கு, நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளி பகல், மறுபயணம், வாசனைப்புல், செம்மண் மடல்கள், சிற்றகல், பிறத்தல் அதன் சுதந்திரம், கொங்குத்தேவர் வாழ்க்கை, புனிதச் சமையல், சிறுபாணன் சென்ற பெருவழி, பனை மரமும் நாட்டுப்புற மக்களும், அருகி வரும் மாட்டுவண்டி, மொழிவளம் பெற, தமிழில் கடித இலக்கியம்.      

குறிப்பு :

Ø  இவர் ஒரு நவீன பெண் கவிஞர் ஆவார்.

Ø  இவர் ஒரு சமூக சேவகி ஆவார்.

Ø  இவர் எழுத்து, தீபம், கணையாழி, அண்ணம்விடு தூது, கவி போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்.

Ø  இவருடைய ஆங்கில படைப்பு இந்தியப் பெண் கவிகள் பேசுகிறார்கள் என்பது ஆகும்.

Ø Seeds France, Dust and Dreams என்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

Ø  இவர் எழுதிய உதய நகரிலிருந்து என்னும் நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் 2006 ல் பெற்றதுள்ளது.

Ø இவர் 2007   ல் கல்லாடனார் இலக்கிய விருதும், திருப்பூர் தமிழ் சங்க விருதும் பெற்றுள்ளார்.  

Ø  இவர் 2010 ல் புதுவை பாரதி விருதும், கவிக்கோ விருதும் பெற்றுள்ளார். 

Ø  இவர் 1982 ல் கவியோகி சுத்தானந்த பாரதி தலைமையில் நடந்த கவியரங்கில் கவிதைகள் பாடியுள்ளார்.

Ø  இவர் 2005 ல் கவிஞர் சிற்பி என்ற இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.  

Ø  இவர் சிறந்த கல்லூரிப் பேச்சாளருக்கான தங்கப்பதக்கத்தை கோவை பூ.சா.கோ.நாவலர் மன்றத்தின் சார்பில் பெற்றுள்ளார்.  

Ø  இவர் புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லில் 1976 ல் இணைந்தார்.

Ø  பாரதி, பாரதிதாசனுக்கு பிறகு பெண் உரிமைப் பற்றி அதிகம் எழுதியுள்ளார்.

Ø  இவருடைய கவிதைகள் முழுவதும் மீனாட்சி கவிதைகள் என்ற தொகுப்பில் நூலாக வெளியாகியுள்ளது. அதில் 191 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள் :

v  எவனோ எழுதி வைத்த…………………

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...