Thursday

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இயற்பெயர் : கல்யாணசுந்தரம்  

பெற்றோர் : அருணாச்சலம், விசாலாட்சி

பிறந்த ஊர் : பட்டுக்கோட்டை அருகே உள்ள சொக்கப்படுத்தான் காடு  

காலம் : 13/04/1930 – 8/10/1959

சிறப்புப்பெயர்கள் : பாடல் மேதை, பாட்டாளி கவிஞர், மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், திரையிசை திருவள்ளுவர்.                

குறிப்பு : 

Ø  இவர் கண்ணதாசனைப் போல பல திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

Ø  இவருடைய முதல் பாடல் “நல்லதைச் சொன்னா நாத்திகனா” என்பது ஆகும். இது படித்த பெண் என்ற படத்தில் வந்துள்ளது.  

Ø  இவரின் கவிதைகள் ஜனசக்தி என்ற இதழில் வந்தது.

Ø  பாரதிதாசன் இவரை எனது வலதுகை என்று புகழ்ந்துள்ளார்.

Ø  பொதுவுடைமை கருத்துக்களை திரைப்பட பாடல்களில் கொன்டுவந்தவர்.

Ø  நீ மீண்டும் தோன்றிய பாரதியாட என்று ஜீவானந்தம் என்று இவரை கூறினார்.

Ø  இவர் சினிமா துறையில் ஒன்பது ஆண்டுகள் இருந்துள்ளார் அதில் இவர் 106 பாடல்களை எழுதியுள்ளார்.  

Ø  மக்கள் எழுச்சியும் சமுதாய முன்னேற்றமும் இவருடைய இரு கண்கள் என கருதினார்.

Ø  இவர் ஒரு விவசாயி, மாடு மேய்ப்பவர், மாட்டு வியாபாரி போன்ற 17 தொழில்க்களை செய்துள்ளார்.

Ø  இவருடைய முத்திரை வினா

*      சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணிக் கிழிச்சீங்     

மேற்கோள் :

v  தூங்காதே தம்பி தூங்காதே………..

v  ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே – மனிதன்………….

v  உச்சி மலையிலே ஊரும் அருவிகள்………….

v  எளிய தமிழில் சீர்திருத்த கருத்துகளையும்…………

v  திருடாதே பாப்பா திருடாதே……………

v  காடு வௌஞ்சென்ன மச்சான்…………..    

No comments:

Post a Comment

கல்யாண்ஜி

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...